கைகளில் உள்ள கருமையைப் போக்க இலகுவான வழிமுறைகள்!
சூரியக்கதிர்களின் தாக்கத்திற்கு உட்படும் உடலுறுப்பு எதுவென்று கேட்டால் , கைகள் என்பதுதான் விடையாக இருக்கும் . அந்தளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் கைகளானது கருமையடைந்துவிடுகின்றன. மேலும் நம் கைகளைப் பார்த்தால் நமக்கே அடையாளம் தெரியாது. அதுமட்டுமின்றி முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இத்தகைய கருமையைப் போக்க வேண்டுமானால் கைகளுக்கும் சரியான பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது. அதுவும் எப்படி முகத்திற்கு மாஸ்க், ஃபேஷியல், கிளின்சிங் போன்றவற்றை செய்கிறோமோ அதேப் போன்று கைகளுக்கும் செய்ய வேண்டும். இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்க உள்ள வழிமுறைகளை பார்க்கலாம்….
கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். இப்படி பேஸ்ட் செய்தவர்கள் அதனை இரவு நேரங்களில் பூசுவதால் அதிக பலன் கிடைக்கும் . ஏனெனில் பகலில் பூசினால், பின்னர் வெயிலில் செல்லும் போது மீண்டும் தாக்கத்திற்கு உள்ளாகலாம். ஆனால் இரவில் பூசினால் மீண்டும் கையில் வெயில் பட நீண்ட நேரமாகும் என்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
சூரியக்கதிர்களின் தாக்கத்திற்கு உட்படும் உடலுறுப்பு எதுவென்று கேட்டால் , கைகள் என்பதுதான் விடையாக இருக்கும் . அந்தளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் கைகளானது கருமையடைந்துவிடுகின்றன. மேலும் நம் கைகளைப் பார்த்தால் நமக்கே அடையாளம் தெரியாது. அதுமட்டுமின்றி முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இத்தகைய கருமையைப் போக்க வேண்டுமானால் கைகளுக்கும் சரியான பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது. அதுவும் எப்படி முகத்திற்கு மாஸ்க், ஃபேஷியல், கிளின்சிங் போன்றவற்றை செய்கிறோமோ அதேப் போன்று கைகளுக்கும் செய்ய வேண்டும். இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்க உள்ள வழிமுறைகளை பார்க்கலாம்….
* கருமையை நீக்கும் பப்பாளி
பப்பாளியில் கிளின்சிங் தன்மை இருப்பதால் இதன் ஒரு துண்டைக் கொண்டு தினமும் கைகளை தேய்த்து, ஊற வைத்து கழுவி வந்தால், கைகளில் உள்ள கருமையானது படிப்படியாக நீங்கிவிடும். அதேபோன்று பாலும் சருமத்தில் கருமையைப் போக்க உதவும் ஒரு சிறந்த பொருள். அதற்கு காய்ச்சாத பாலை தினமும் குளிக்கும் முன், தடவி ஊற வைத்து, நீரில் பருத்தித்துணியை நனைத்து துடைத்துவிட்டு, பின் குளிக்க செல்ல வேண்டும்.
* கற்றாழை ஜெல்லில் நீங்கும் கருமை
கற்றாழை ஜெல்லில் சிறிது வெள்ளரிக்காய் சாறு அல்லது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து, கருமையான இடங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, இந்த முறையை வெளியே செல்லும் முன்பு செய்துவிட்டு சென்றால், கைகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
* எலுமிச்சையும் நல்ல நிவாரணி
எலுமிச்சை சாற்றில் ப்ளீச்சிங் தன்மை இருந்தால், அந்த எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் தவறாமல் செய்து வந்தால், கைகள் படிப்படியாக கருமை நிறம் மறைந்து வெண்மை நிறமடைவதை காணலாம். மேலும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சம அளவு எடுத்து, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, கைகளில்தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ச்சியான நீரில் கழுவினால் அவற்றில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கைகளில் உள்ள கருமை நிறமானது மங்கும். இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* இரவு நேரத்தில் கடலைப் பேஸ்ட்
கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். இப்படி பேஸ்ட் செய்தவர்கள் அதனை இரவு நேரங்களில் பூசுவதால் அதிக பலன் கிடைக்கும் . ஏனெனில் பகலில் பூசினால், பின்னர் வெயிலில் செல்லும் போது மீண்டும் தாக்கத்திற்கு உள்ளாகலாம். ஆனால் இரவில் பூசினால் மீண்டும் கையில் வெயில் பட நீண்ட நேரமாகும் என்பதால் நல்ல பலன் கிடைக்கும்.



No comments:
Post a Comment